தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: புதிய தலைவராகும் ஜி.கே.எம். தமிழ்குமரன் | மீண்டும் ‛தி ராஜா சாப்' பட நிறுவனத்துடன் இணையும் பிரபாஸ்! | சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணா | பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்! | ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து! | 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பிரதீப் ரங்கநாதன் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு! |

கரண் ஜோகர் வழங்கி வரும் காபி வித் கரண் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது எபிசோடில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் , சமந்தா கலந்து கொண்டார்கள். அப்போது சமந்தா பேசும்போது நயன்தாரா பற்றி குறிப்பிட்டார். இதற்கு கரண் ஜோகர் நயன்தாராவின் பெயர் என்னுடைய லிஸ்டில் இல்லையே, சமந்தா என்று தானே உள்ளது என்றார் . இப்படி அவர் சொன்னது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய விவாதமானது. நயன்தாராவின் ரசிகர்கள் கரண் ஜோகருக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டனர்.
இந்த நிலையில் இந்த சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் கரண் ஜோகர். அவர் கூறுகையில், ஆர்மேக்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து தனக்கு கிடைத்த பட்டியலில் தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகை என்பதில் சமந்தாவின் பெயர் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை வைத்துதான் நான் அப்படி கூறினேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து அல்ல என்று ஒரு விளக்கம் கொடுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.