'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கரண் ஜோகர் வழங்கி வரும் காபி வித் கரண் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது எபிசோடில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் , சமந்தா கலந்து கொண்டார்கள். அப்போது சமந்தா பேசும்போது நயன்தாரா பற்றி குறிப்பிட்டார். இதற்கு கரண் ஜோகர் நயன்தாராவின் பெயர் என்னுடைய லிஸ்டில் இல்லையே, சமந்தா என்று தானே உள்ளது என்றார் . இப்படி அவர் சொன்னது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய விவாதமானது. நயன்தாராவின் ரசிகர்கள் கரண் ஜோகருக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டனர்.
இந்த நிலையில் இந்த சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் கரண் ஜோகர். அவர் கூறுகையில், ஆர்மேக்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து தனக்கு கிடைத்த பட்டியலில் தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகை என்பதில் சமந்தாவின் பெயர் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை வைத்துதான் நான் அப்படி கூறினேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து அல்ல என்று ஒரு விளக்கம் கொடுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.