சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக இருப்பவர் சமந்தா. தற்போது தமிழில் விஜய்யின் 67வது படத்தில் நடிக்க அவருடன் பேசி வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் தெலுங்கில் 'சகுந்தலை, யசோதா,' என இரண்டு படங்கள் அவரது நடிப்பில் இந்த வருடத்தில் வெளியாக வாய்ப்புள்ளது.
கடைசியாக ஒரு மாதத்திற்கு முன்பாகத்தான் தனிப்பட்ட பதிவுகளைப் பதிவிட்டார். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு விளம்பரப் பதிவை மட்டும் பதிவிட்டிருந்தார். அடிக்கடி விதவிதமான பதிவுகளை, புகைப்படங்களுடன் பதிவிட்டு ஆக்டிவ்வாக இருந்தவர் திடீரென ஒதுங்கியது பலரை ஆச்சரியப்படுத்தியது.
நாக சைதன்யா, சோபியா துலிபல்லா இடையிலான எழுந்த காதல் கிசுகிசுவை சமந்தா தரப்புதான் பரப்பி விட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அதனால், சமந்தா இப்படி இடைவெளி விட்டிருக்கலாம் என்கிறார்கள்.
அந்த இடைவெளிக்குப் பிறகு நேற்று இன்ஸ்டா ஸ்டோரியில் 'காபி வித் கரன்' நிகழ்ச்சி பற்றிய வீடியோ ஒன்றையும், அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாருடனும் ஒரு போட்டோவைப் பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சி வியாழக்கிழமையன்று இரவு 7 மணிக்கு ஓடிடி தளத்தில் முதல் முறை ஒளிபரப்பாக உள்ளது.