'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' | 2025 படங்களில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | இயக்குனராக மாறிய கருணாஸ் மகன் படம் துவங்கியது : பள்ளிக்கூட பின்னணியில் கதை நடக்கிறது | விஜய் கேட்ட அந்த ஒரு கேள்வியால் நடிப்பை விட்டே ஒதுங்கினேன் : நடிகை ரோஜா | மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அறிமுக இயக்குனர் டைரக்சனில் மோகன்லால் நடிக்கும் படம் டிசம்பரில் துவக்கம் |

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக இருப்பவர் சமந்தா. தற்போது தமிழில் விஜய்யின் 67வது படத்தில் நடிக்க அவருடன் பேசி வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் தெலுங்கில் 'சகுந்தலை, யசோதா,' என இரண்டு படங்கள் அவரது நடிப்பில் இந்த வருடத்தில் வெளியாக வாய்ப்புள்ளது.
கடைசியாக ஒரு மாதத்திற்கு முன்பாகத்தான் தனிப்பட்ட பதிவுகளைப் பதிவிட்டார். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு விளம்பரப் பதிவை மட்டும் பதிவிட்டிருந்தார். அடிக்கடி விதவிதமான பதிவுகளை, புகைப்படங்களுடன் பதிவிட்டு ஆக்டிவ்வாக இருந்தவர் திடீரென ஒதுங்கியது பலரை ஆச்சரியப்படுத்தியது.
நாக சைதன்யா, சோபியா துலிபல்லா இடையிலான எழுந்த காதல் கிசுகிசுவை சமந்தா தரப்புதான் பரப்பி விட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அதனால், சமந்தா இப்படி இடைவெளி விட்டிருக்கலாம் என்கிறார்கள்.
அந்த இடைவெளிக்குப் பிறகு நேற்று இன்ஸ்டா ஸ்டோரியில் 'காபி வித் கரன்' நிகழ்ச்சி பற்றிய வீடியோ ஒன்றையும், அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாருடனும் ஒரு போட்டோவைப் பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சி வியாழக்கிழமையன்று இரவு 7 மணிக்கு ஓடிடி தளத்தில் முதல் முறை ஒளிபரப்பாக உள்ளது.




