டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஜய்சேதுபதி, காயத்ரி, குருசோமசுந்தரம் நடித்த மாமனிதன் படம் கடந்த மாதம் 14ம் தேதி தியேட்டரில் வெளியானது. சீனு ராமசாமி இயக்கிய இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து தயாரித்திருந்தார். இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைத்திருந்தார்கள். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது இந்த படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி பேசியதாது: இந்தப்படத்தை திரையரங்கில் தவற விட்டவர்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு, வீட்டில் இந்தப்படம் பார்ப்பவர்களுக்கு ராதாகிருஷ்ணன் நெருக்கமானவனாகிவிடுவான். மாமனிதன் குறித்து என்னிடமும் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டது, ஆனால் எதற்கும் நான் பதில் சொல்லவில்லை. ஒரு கதாப்பாத்திரம் நீங்கள் எதிர்பார்ப்பது போல் நடக்க முடியாது. நடக்க தேவையில்லை. சீனு ராமசாமி போல் ஒரு படம் எடுக்க இங்கு யாரும் இல்லை. இந்தப்படம் நான் டப்பிங் பண்ணும் போது பார்க்கையில், அத்தனை உயிர்ப்புடன் இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த படமாக இருந்தது. இந்தப் படம் காலத்தால் அழியாது, காலங்கள் கடந்து நிற்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.