ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, முன்னணி நாயகியாக திகழ்ந்தார். சமீபகாலமாக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடந்து 2009ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மீனா. அவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். இவர் விஜய்யின் தெறி படத்தில் அவரது மகளாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக வித்யாசாகர் காலமானார். இதனிடையே நேற்று ஜூலை 12ம் தேதி மீனா மற்றும் வித்யாசாகரின் 13வது திருமண நாளாகும். இந்த நிலையில் மீனா கடந்த ஆண்டு போட்ட ஒரு பதிவு வைரலாகி வருகிறது. அந்த பதிவில், ‛‛நீ என் வாழ்வில் வானவில் போல வந்து என் வாழ்க்கையை மிகவும் வண்ணமயமாக்கினாய். சேர்ந்து இருப்பதுதான் அற்புதமானது. எனக்கு பிடித்த இடம் அதுதான். நீ கொடுத்த புன்னகையை எப்போதும் அணிந்திருப்பேன். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்'' என மீனா பதிவிட்டு இருந்தார்.
இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் மீண்டும் வைரலாகி வருகிறது.