பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
நடிகை நயன்தாரா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் ஓடிடி.,யில் வெளியான 'ஓ2' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே இயக்குனர் விக்னேஷ் சிவனை, அண்மையில் திருமணம் செய்துக் கொண்ட நயன்தாரா, தற்போது சினிமாவில் மீண்டும் நடிக்க அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் நயன்தாரா நடிக்கும் 75வது படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தை ட்ரைடண்ட் ஆர்ட் நிறுவனம் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரிக்கிறார். இப்படத்தை நீலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர்கள் ஜெய் மற்றும் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.