பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு பிறகு பார்த்திபன் ஒரே ஷாட்டில் இயக்கியுள்ள படம் இரவில் நிழல். இந்த படத்திற்கு ஏ. ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை ஜூலை 15ம் தேதி வெளியிட பார்த்திபன் தயாராகி வரும் நிலையில், தற்போது நவீன் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் ஒரு வழக்கு தொடர்ந்து உள்ளது. அதில், விருது பெரும் நோக்கத்துடன் இரவின் நிழல் என்ற படத்தை அகிரா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார் நடிகர் பார்த்திபன். இந்த படத்தின் படப்பிடிப்புக்கு தேவையான ஒளிப்பதிவு சாதனங்களை குறைந்த வாடகையில் நவீன் என்டர்பிரைசஸ் என்ற எங்கள் நிறுவனத்திடம் எடுத்திருந்தார்.
ஆனால் ஏற்கனவே பேசப்பட்ட வாடகை தொகையில் 25 லட்சத்து 13 ஆயிரத்து 738 ரூபாயை அவர் இன்னும் செட்டில் செய்யவில்லை. அதனால் இரவின் நிழல் படத்தை ஜூலை 15ம் தேதி வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்தை சார்ந்த பாஸ்கர் ராவ் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். எஸ். சத்தியமூர்த்தி, இந்த வழக்கு சம்பந்தமாக நடிகர் பார்த்திபன் மற்றும் அவரது நிறுவனத்தின் இயக்குனரான அவரது மகள் கீர்த்தனா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 12ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்.