‛விடுதலை'-க்காக இளையராஜா இசையில் பாடிய தனுஷ் | ‛மைக்கேல்' விமர்சனம் : அனைவரையும் திருப்திபடுத்தும் படைப்பு இல்லை - ரஞ்சித் ஜெயக்கொடி | 'ஏகே 62' இந்த வாரம் அறிவிப்பு வருமா ? | இன்ஸ்டாவில் சண்டை : கடுப்பாகி எச்சரித்த சீரியல் நடிகை | ஷிவின் வெற்றி பெற்றிருந்தால்...? மனம் திறக்கும் கதிர் | படிக்கதான் முடியல அட்வைஸாச்சும் பண்ணுவோம்! டிடி வெளியிட்ட ஆக்ஸ்போர்ட் அட்வைஸ் | வாரிசு - 300 கோடி கடந்ததாக விஜய் ரசிகர்கள் செய்யும் 'டிரெண்டிங்' | 800 கோடி வசூலைக் கடந்த 'பதான்' | கீதா கோவிந்தம் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் தேரகொண்டா | மீண்டும் நடிக்கிறார் தங்கர் பச்சான் |
ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு பிறகு பார்த்திபன் ஒரே ஷாட்டில் இயக்கியுள்ள படம் இரவில் நிழல். இந்த படத்திற்கு ஏ. ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை ஜூலை 15ம் தேதி வெளியிட பார்த்திபன் தயாராகி வரும் நிலையில், தற்போது நவீன் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் ஒரு வழக்கு தொடர்ந்து உள்ளது. அதில், விருது பெரும் நோக்கத்துடன் இரவின் நிழல் என்ற படத்தை அகிரா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார் நடிகர் பார்த்திபன். இந்த படத்தின் படப்பிடிப்புக்கு தேவையான ஒளிப்பதிவு சாதனங்களை குறைந்த வாடகையில் நவீன் என்டர்பிரைசஸ் என்ற எங்கள் நிறுவனத்திடம் எடுத்திருந்தார்.
ஆனால் ஏற்கனவே பேசப்பட்ட வாடகை தொகையில் 25 லட்சத்து 13 ஆயிரத்து 738 ரூபாயை அவர் இன்னும் செட்டில் செய்யவில்லை. அதனால் இரவின் நிழல் படத்தை ஜூலை 15ம் தேதி வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்தை சார்ந்த பாஸ்கர் ராவ் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். எஸ். சத்தியமூர்த்தி, இந்த வழக்கு சம்பந்தமாக நடிகர் பார்த்திபன் மற்றும் அவரது நிறுவனத்தின் இயக்குனரான அவரது மகள் கீர்த்தனா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 12ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்.