மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் கடுவா. ஆக்சன் படங்களை இயக்குவதில் பெயர் பெற்ற இயக்குனர் ஷாஜி கைலாஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் வில்லனாக விவேக் ஓபராய் நடித்துள்ளார். தன் ஏரியாவில் டான் ஆக விளங்கும் பிரித்விராஜுக்கும் அசிஸ்டன்ட் போலீஸ் கமிஷனரான விவேக் ஓபராய்க்கும் இடையே நடக்கும் பிரச்னை தான் இந்த படத்தின் கதை.
சொல்லப்போனால் இந்த இருவருக்கும் எந்த பிரச்னையும் இல்லாத நிலையில் பிரித்விராஜ், விவேக் ஓபராயின் தாயிடம் சொன்ன ஒரு வார்த்தை காரணமாக பெரிதாகும் ஒரு பிரச்னை இவர்கள் இருவருக்கும் நீயா நானா பார்த்துவிடலாம் என்கிற ஈகோ மோதலை உருவாக்குகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றியும் பெற்றுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான டிரைவிங் லைசன்ஸ் மற்றும் அய்யப்பனும் கோஷியும் ஆகிய படங்களும் பிரித்விராஜ் நடிப்பில் ஈகோ யுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள் தான். அந்த வகையில் ஈகோ யுத்த கதைகள் பிரித்விராஜூக்கு தொடர்ந்து வெற்றி தருகின்றன என்பது ஆச்சரியமான விஷயம் தான்.




