ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் | பிளாஷ்பேக் : மருங்காபுரி சிவபாக்கியத்தின் நூற்றாண்டு | பிளாஷ்பேக்: 'சிட்டாடெல்' ஆனந்தன் சினிமாவின் 'விஜயபுரி வீரன்' | மாஸ்டர் 2ம் பாகத்தை விரும்பும் லோகேஷ் | ராம் பொத்தினேனி படத்தில் உபேந்திரா | இளையராஜா படத்தை மிஸ் செய்த கார்த்திக் சுப்பராஜ் |
சூப்பர் ஹிட் அடித்த தொடர்களில் ஒன்று 'நாயகி'. இந்த தொடரின் ஆரம்பத்தில் சினிமா நடிகை விஜயலெட்சுமி ஹீரோயினாக நடித்தார். பின் சில காரணங்களுக்காக அவர் தொடரை விட்டு வெளியேற வித்யா பிரதீப் ஹீரோயினானார். வித்யா ப்ரதீப்பின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதுபோலவே வில்லியாக நடித்த சுஷ்மா நாயரும் பிரபலமாகி இன்று சில சீரியல்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த வித்யா ப்ரதீப், சுஷ்மா நாயர், மீரா கிருஷ்ணன் மற்றும் மெர்சி லேயாள் சமீபத்தில் மீண்டும் சந்தித்து கொண்டனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மிரா கிருஷ்ணன் பகிர்ந்துள்ளார். நாயகி தொடரின் நாயகிகள் நால்வரும் ஒன்றாகும் நிற்கும் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் பலரும் 'நாயகி' சீரியலை ரொம்பவும் மிஸ் செய்வதாக கூறி வருகின்றனர். இவர்களின் காம்போவில் மீண்டும் புதிய சீரியல் வர வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.