திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார் | சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் |

யசோதா, சாகுந்தலம், குஷி ஆகிய தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் சமந்தா. இதையடுத்து ஹிந்தியில் சல்மான்கானுக்கு ஜோடியாக ஒரு படத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்ஸ்டாகிராமில் 24 மில்லியன் பாலோயர்களை கொண்டுள்ள சமந்தா பதிவிடும் ஒவ்வொரு அப்டேட்களுக்கும் லட்சக்கணக்கான லைக்ஸ் கிடைத்து வருகிறது. இந்த நேரத்தில் திடீரென்று சமந்தாவின் இன்ஸ்டாவில் மர்ம நபரின் புகைப்படம் வெளியானதால் அவரது இன்ஸ்டா ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகின.
இந்த நிலையில் சமந்தாவின் மேனேஜர் அது குறித்து ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். அவர் கூறுகையில், சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த பதிவு தவறாக இடம் பெற்றது. தற்போது அது சரி செய்யப்பட்டு விட்டது என்று தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக சமந்தாவின் இன்ஸ்டா ஹேக் செய்யப்பட்டதாக வெளியான பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது.