ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
யசோதா, சாகுந்தலம், குஷி ஆகிய தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் சமந்தா. இதையடுத்து ஹிந்தியில் சல்மான்கானுக்கு ஜோடியாக ஒரு படத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்ஸ்டாகிராமில் 24 மில்லியன் பாலோயர்களை கொண்டுள்ள சமந்தா பதிவிடும் ஒவ்வொரு அப்டேட்களுக்கும் லட்சக்கணக்கான லைக்ஸ் கிடைத்து வருகிறது. இந்த நேரத்தில் திடீரென்று சமந்தாவின் இன்ஸ்டாவில் மர்ம நபரின் புகைப்படம் வெளியானதால் அவரது இன்ஸ்டா ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகின.
இந்த நிலையில் சமந்தாவின் மேனேஜர் அது குறித்து ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். அவர் கூறுகையில், சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த பதிவு தவறாக இடம் பெற்றது. தற்போது அது சரி செய்யப்பட்டு விட்டது என்று தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக சமந்தாவின் இன்ஸ்டா ஹேக் செய்யப்பட்டதாக வெளியான பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது.