பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவரான குப்ரா சயித், 'சுல்தான், ரெடி அண்ட் சிட்டி ஆப் லைப் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 'ஓபன் புக்' என்ற பெயரில் தனது வாழ்க்கை அனுபவங்களை புத்தகமாக எழுதி உள்ளார். இதில் அவர் சிறுவயதில் இருந்து அவருக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படையாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது : எனக்கு நடந்த இந்த பாலியல் துன்புறுத்தல்களை என் மீது கருணை காட்ட வேண்டும் என்பதற்காக நான் கூறவில்லை. பாலியல் துன்புறுத்தல் அனுபவத்தைப் பற்றி பேசுவது அவ்வளவு எளிதானது அல்ல. அது நீண்ட நாள் காயத்தை தரும். பாலியல் குற்றங்களை பகிர்ந்து கொள்ளும்போது மக்களிடமிருந்து எதிர் விமர்சனங்களை வரும். இதனால் குடும்பத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும் சமூகம் நினைக்கிறது. இந்த மனோபாவம் சில ஆண்களை ஊக்கப்படுத்தத்தான் செய்யும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.