18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி |
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்து வசூலைக் குவித்த படம் 'புஷ்பா'. இப்படத்தின் இரண்டாம் பாகப் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படத்தின் திரைக்கதையை மெருகேற்றும் வேலையில் படத்தின் இயக்குனர் சுகுமார் ஈடுபட்டுள்ளாராம்.
இப்படத்தின் முதல் பாகத்தில் நடிப்பதற்கு விஜய் சேதுபதியிடம் கேட்டிருந்தார்கள். ஆனால், சில காரணங்களால் அவர் நடிக்க மறுத்துவிட்டதாகத் தகவல். இருப்பினும் இரண்டாம் பாகத்தில் அவருக்காக ஒரு முக்கிய போலீஸ் உயர் அதிகாரி கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்களாம். அதில் நடிப்பதற்காக விஜய் சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
சுகுமார் தயாரித்த தெலுங்குப் படமான 'உப்பெனா' படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் தமிழ் நடிகரும், ஹிந்தி நடிகரும் நடித்தால் படத்திற்கு பக்கபலமாக இருக்கும் என அல்லு அர்ஜுன் நினைக்கிறாராம். விஜய் சேதுபதி நடிக்க சம்மதித்தால் 'விக்ரம்' படத்திற்குப் பிறகு அவர் மீண்டும் பகத் பாசிலுடன் இந்தப் படத்தில் இணைந்து நடிப்பார்.