‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்து வசூலைக் குவித்த படம் 'புஷ்பா'. இப்படத்தின் இரண்டாம் பாகப் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படத்தின் திரைக்கதையை மெருகேற்றும் வேலையில் படத்தின் இயக்குனர் சுகுமார் ஈடுபட்டுள்ளாராம்.
இப்படத்தின் முதல் பாகத்தில் நடிப்பதற்கு விஜய் சேதுபதியிடம் கேட்டிருந்தார்கள். ஆனால், சில காரணங்களால் அவர் நடிக்க மறுத்துவிட்டதாகத் தகவல். இருப்பினும் இரண்டாம் பாகத்தில் அவருக்காக ஒரு முக்கிய போலீஸ் உயர் அதிகாரி கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்களாம். அதில் நடிப்பதற்காக விஜய் சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
சுகுமார் தயாரித்த தெலுங்குப் படமான 'உப்பெனா' படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் தமிழ் நடிகரும், ஹிந்தி நடிகரும் நடித்தால் படத்திற்கு பக்கபலமாக இருக்கும் என அல்லு அர்ஜுன் நினைக்கிறாராம். விஜய் சேதுபதி நடிக்க சம்மதித்தால் 'விக்ரம்' படத்திற்குப் பிறகு அவர் மீண்டும் பகத் பாசிலுடன் இந்தப் படத்தில் இணைந்து நடிப்பார்.