எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பிரபல பின்னணி பாடகி சின்மயி கடந்த சில வருடங்களுக்கு முன் பரபரப்பான 'மீ டு' என்கிற சோசியல் மீடியா பிரச்சாரத்தின் மூலமாக பாடலாசிரியர் வைரமுத்துவின் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியதன் மூலம் பரபரப்பு வளையத்திற்குள் வந்தார். அதன்பிறகு தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். இதனாலேயே நெட்டிசன்கள் பலரும் சோசியல் மீடியாவில் சின்மயி மீது கருத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க தற்போது திடீரென சின்மயியின் இன்ஸ்டாகிராம் கணக்கு நீக்கப்பட்டுள்ளது.. இருந்தாலும் அவர் தான் ஏற்கனவே வைத்திருக்கும் பேக்கப் கணக்கு மூலமாக இந்த தகவலை தெரிவித்துள்ளதுடன் தனது கணக்கு நீக்கப்பட்டு அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.
சின்மயியின் கணக்கிற்கு ஆண்கள் சிலர் தங்களது ஆணுறுப்புடன் கூடிய புகைப்படங்களை நேரடி செய்தியாக (DM) தொடர்ந்து அனுப்பி வந்துள்ளனர். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் சப்போர்ட் குழுவில் சின்மயி புகார் அளித்துள்ளார். ஆனால் அவரது கணக்கை இன்ஸ்டா குழு நீக்கிவிட்டதாக சின்மயி கூறியுள்ளார்.