சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
சமீபத்தில் வெளியான, "நாயக் படம், வெற்றி பெற்றதால், தெலுங்கிலும் முன்னணி நடிகையாகியுள்ள, அமலா பால், பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், அல்லு அர்ஜுனுடன், "இட்டராமய்யலதே என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, பாங்காக்கில் நடந்தது.அப்போது, பிரபலமான ஒரு ஓட்டலில், படக் குழுவினருக்காக, படத்தின் தயாரிப்பாளர், விருந்து கொடுத்தார். இந்த விருந்தில், நடிகர், நடிகைகளுடன், படக் குழுவினருடன் சேர்ந்து, "கங்னம் ஸ்டைல் ஆட்டத்தில், கலக்கி எடுக்க, அமலா பாலையும், ஆடும்படி அழைப்பு விடுத்திருக்கின்றனர்.ஆரம்பத்தில், சற்று தயங்கிய அமலா, அனைவரும் வற்புறுத்தவே, வேறு வழியின்றி, ஆடத் துவங்கினார். அப்புறம் என்ன? இரவு முழுவதும், அமலா பால், ஆட்டத்தில், பின்னி எடுத்திருக்கிறார். கூடவே, அல்லு அர்ஜுனும், அமலாவுடன் சேர்ந்து கொள்ள, பாங்காக்கே பதறும் அளவுக்கு, ஆட்டம், களை கட்டியிருக்கிறது.