தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன்லால் : கனவிலும் நினைக்கவில்லை என நெகிழ்ச்சி | தேசிய விருது பெற்றனர் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, எம்எஸ் பாஸ்கர், ஜிவி பிரகாஷ், ஊர்வசி | இட்லி கடை படத்திற்கு தணிக்கை குழு ‛யு' சான்றிதழ் | 100 கோடி லாபத்தில் 'லோகா' | ஹிந்தியில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் | சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | துருவ் விக்ரமுக்கு வாழ்த்து சொன்ன அனுபமா பரமேஸ்வரன் | மீண்டும் படம் இயக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி | தாய்மையை அறிவித்த கத்ரினா கைப் | 'காந்தா சாப்டர் 1 டிரைலர்' : கன்னடத்தை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு |
ஆர்ஆர்ஆர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் அடுத்ததாக கொரட்டலா சிவா மற்றும் கேஜிஎப் படத்தின் இயக்குனர் பிரஷாந்த் நீல் ஆகியோருடன் புதிய படங்களில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியது. இந்த இரண்டு படங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர், வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன், ஜூனியர் என்டிஆரை நேரில் சந்தித்து கதை கூறியதாகவும் அந்த கதை அவருக்கு பிடித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. வெற்றிமாறன் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் 'வாடிவாசல்' படத்தை இயக்க இருக்கிறார்.