அவமானப்படுத்தியதாக பெண் தயாரிப்பாளர் புகார் : தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இருவர் மீது வழக்கு பதிவு | நடிகர் சத்யேந்திரா உடல் தகனம் | டாக்சிக் குறித்து கியாரா அத்வானி பகிர்ந்த தகவல் | ஜனநாயகன் எப்போது ரிலீஸ் : வினோத் கொடுத்த பதில் | ‛வேட்டுவம்' படம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்த சோபிதா துலிபாலா | ‛சிஸ்டம்' பட வெற்றிக்காக மும்பை மகாலட்சுமி கோவிலுக்கு சென்று நன்றி செலுத்திய ஜோதிகா | ஜெயராமின் காலைத் தொட்டு வணங்கிய தோனியின் மனைவி | ஷாருக்கான், கஜோல் உள்ளிட்ட பல பிரபலங்களை அன்பாலோ செய்த கரண் ஜோஹர் | ஸ்வேதா மேனன் உள்ளிட்ட மூவர் மீது முதலமைச்சரிடம் புகார் கொடுத்த திரிஷ்யம் நடிகை | தமிழ் சினிமாவின் 11வது 300 கோடி படமாக 'கருப்பு' : மற்ற படங்களின் லிஸ்ட் இதோ... |

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 169வது படத்திற்கு ஜெயிலர் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ரஜினி ரசிகர்கள் அந்த டைட்டிலை சோசியல் மீடியாவில் டிரெண்ட் செய்தனர். பல சினிமா பிரபலங்கள் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் சிம்பு நடித்த மாநாடு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சியும், ஜெயிலர் படத்தின் போஸ்டர் வெளியானதை அடுத்து ரஜினிக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவு போட்டிருந்தார்.
அதில், ‛‛எத்தனை குதிரைகள் ஓடினாலும் ரஜினிகாந்த் என்ற இந்த குதிரை விழும் சட்டென எழும். வெற்றிகொள்ளும் குதிரை. சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். ரஜினி என்ற மூன்றெழுத்து மேஜிக், ஜெயிலர் மூலம் மீண்டும் நிகழும் வாழ்த்துக்கள்'' என தெரிவித்தார். ஆனால் சுரேஷ் காமாட்சியின் இந்த பதிவு ரஜினியை கிண்டல் செய்வதாக செய்தி வைரலானது.
அதையடுத்து அதற்கு கண்டனம் தெரிவித்து மீண்டும் ஒரு பதிவு போட்டுட்டுள்ளார் சுரேஷ் காமாட்சி. அந்த பதிவில், பாராட்டிற்கும் கிண்டலுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் எழுத வந்துட்டா இப்படித்தான் பூடம் தெரியாமல் சாமி ஆடுவாங்க என்று தெரிவித்துள்ளார்.




