சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
சிவா இயக்கத்தில் ‛அண்ணாத்த' படத்தில் நடித்த ரஜினி அதையடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கும் தனது 169 வது படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். சமீபகாலமாக தான் நடித்த படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால் இந்த படத்தை சூப்பர் ஹிட் படமாக கொடுத்துவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார் ரஜினி. அதன் காரணமாகவே பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் அந்த படத்தில் வலுவான திரைக்கதையை அமைக்காததால், இப்படத்தின் திரைக்கதையை எழுதுவதற்கு தனது ஆஸ்தான இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரை நியமித்திருக்கிறார்.
இந்த படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், சிவகார்த்திகேயன், சிவராஜ்குமார், கே. எஸ் .ரவிக்குமார், பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஜூலை மாதம் இறுதியிலிருந்து ரஜினி 169வது படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கவுள்ளது. அதோடு இந்த படத்தை மூன்று மாதங்களில் நடித்து முடிக்கவும் ரஜினி திட்டமிட்டிருக்கிறார். அதன் காரணமாக இப்படத்தில் ஒப்பந்தம் செய்துள்ள அனைத்து நடிகர் - நடிகைகளிடமும் மூன்று மாதத்திற்கு மொத்தமாக கால்சீட் வாங்கி உள்ளனர்.