நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பொதுவாக தமிழ் சினிமாவில் போதிய வாய்ப்புகள் இன்றி தெலுங்கிற்கு சென்று முன்னணி நடிகை ஆனவர்கள் இருக்கிறார்கள். சமந்தா, அனுஷ்கா, ரகுல் ப்ரீத்தி சிங், சாய் பல்லவி இப்படி பலரை சொல்லலாம். இதேபோன்று இங்கு சரியான வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கிற்கு சென்று முன்னணி நடிகர் ஆகியிருக்கிறார் ஆதித்.
தமிழ் சினிமாவில் இனிது இனிது படம் மூலமாக நடிகராக அறிமுகமானவர் ஆதித், தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தவர் தெலுங்கு திரையுலகில் "கதா" திரைப்படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தன. வரிசையாக படங்கள் தொடர்ந்து வந்ததில் ஐதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டார் ஆதித்.
தெலுங்கில் இவர் நடித்த 24 கிஸ்ஸஸ், சிக்காடி காடிலோ சித்தகொதுடு, டியர் மேகா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தனது பெயரையும் திரிகுன் என மாற்றிவிட்டார். சமீபத்தில் இவர் பிறந்த நாளை முன்னிட்டு ஒரே நேரத்தில் இவர் நடிக்கும் நான்கு படங்களின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. ராம்கோபால் வர்மா இயக்கும் கொண்டா படத்திலும் இவர் தான் ஹீரோ.
"தமிழ் சினிமாவை விட்டு தெலுங்கு சினிமா பக்கம் சென்றாலும் தமிழ் சினிமாதான் என் தாய்வீடு, தமிழ் இளைஞனாக தமிழ் சினிமாவில் நமக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொள்ளவே எனக்கு விருப்பம். தற்பொழுது அது நிறைவேறும் விதமாக முன்னணி இயக்குனர்களோடு கைகோர்க்கிறேன் என்கிறார் ஆதித் என்கிற திரிகுன்.