கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

அண்ணாத்த படத்தையடுத்து நெல்சன் இயக்கும் தனது 169வது படத்தில் வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் நடிக்கிறார் ரஜினிகாந்த். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மேலும் விஜய்யை வைத்து நெல்சன் இயக்கி வெளியான பீஸ்ட் படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால் தனது 169 வது படத்திலிருந்து நெல்சனை நீக்கிவிட்டு வேறு இயக்குனருக்கு ரஜினி கால்ஷீட் கொடுக்க திட்டமிட்டிருப்பதாக அப்போது செய்திகள் வெளியாகின. ஆனால் ரஜினி அதை மறுத்தார். தனது புதிய படத்தை நெல்சனே இயக்குகிறார் என்பதை உறுதிப்படுத்தினார். அதேசமயம் பீஸ்ட் படத்தின் திரைக்கதை ரஜினிக்கு திருப்பிக் கொடுக்கவில்லை என்பதால் அந்த படத்தின் திரைக்கதை பணிகளில் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரையும் இணைத்திருக்கிறார் ரஜினி. இது தொடர்பான செய்திகள் ஏற்கனவே வெளியாகின. இந்நிலையில் இப்படத்தில் கே.எஸ் .ரவிக்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ரஜினி நடிப்பில் முத்து, படையப்பா, லிங்கா போன்ற படங்களை கே.எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.