ஆகஸ்ட் மாதமே திரைக்கு வரும் ரஜினியின் ஜெயிலர் | கண்ணீர் அஞ்சலி பேனர் உடன் நடிகர் ஜி.எம்.குமார் | காஷ்மீரில் நில அதிர்வு : சென்னை திரும்பிய விஜய் | மகனை தொடர்ந்து அப்பாவை இயக்கும் மாரி செல்வராஜ் | கிரிக்கெட் பயிற்சியில் ‛அட்டகத்தி' தினேஷ் | ஜீவா - அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் | லியோ படத்தில் நடிக்கிறாரா யு-டியூப்பர் இர்பான்? | ஜெயம் ரவி - ஏஆர் ரஹ்மான் இணையும் பான் இந்திய படம் | மீண்டும் கதை நாயகியான அபிராமி | டி.வி.யில் நேரடியாக வெளியாகும் ஆரி படம் |
மலையாள திரையுலகில் ஏற்கனவே மாளவிகா மோகனன், மாளவிகா மேனன், மாளவிகா நாயர் சமீபத்திய வரவாக ஜெயராமின் மகன் மாளவிகா ஜெயராம் என மாளவிகா என்கிற பேரில் அதிகப்படியான நடிகைகள் வலம் வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மாளவிகா ஸ்ரீநாத் என்கிற நடிகை மலையாள திரையுலகில் கதாநாயகியாக அடியெடுத்து வைக்கிறார். இவரை அறிமுகப்படுத்துகிறார் பிரபல இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்.
காயங்குளம் கொச்சுண்ணி என்கிற படத்தை தொடர்ந்து நிவின்பாலியை வைத்து தற்போது படம் ஒன்றை இயக்கி வருகிறார் ரோஷன் ஆண்ட்ரூஸ். இந்தப்படத்தில் தான் மாளவிகா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே மதுரம் என்கிற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரை அறிமுகப்படுத்துவது குறித்து ரோஷன் ஆண்ட்ரூஸ் கூறும்போது, “நிச்சயமாக நீ ஒரு நாள் பெரிய நடிகையாக இந்த திரையுலகில் வலம் வருவாய்” என தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். “உங்கள் வார்த்தைகளை நிச்சயம் நிஜமாக்குவேன்” என பதிலுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் மாளவிகா ஸ்ரீநாத்.