தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள திரையுலகில் ஏற்கனவே மாளவிகா மோகனன், மாளவிகா மேனன், மாளவிகா நாயர் சமீபத்திய வரவாக ஜெயராமின் மகன் மாளவிகா ஜெயராம் என மாளவிகா என்கிற பேரில் அதிகப்படியான நடிகைகள் வலம் வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மாளவிகா ஸ்ரீநாத் என்கிற நடிகை மலையாள திரையுலகில் கதாநாயகியாக அடியெடுத்து வைக்கிறார். இவரை அறிமுகப்படுத்துகிறார் பிரபல இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்.
காயங்குளம் கொச்சுண்ணி என்கிற படத்தை தொடர்ந்து நிவின்பாலியை வைத்து தற்போது படம் ஒன்றை இயக்கி வருகிறார் ரோஷன் ஆண்ட்ரூஸ். இந்தப்படத்தில் தான் மாளவிகா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே மதுரம் என்கிற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரை அறிமுகப்படுத்துவது குறித்து ரோஷன் ஆண்ட்ரூஸ் கூறும்போது, “நிச்சயமாக நீ ஒரு நாள் பெரிய நடிகையாக இந்த திரையுலகில் வலம் வருவாய்” என தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். “உங்கள் வார்த்தைகளை நிச்சயம் நிஜமாக்குவேன்” என பதிலுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் மாளவிகா ஸ்ரீநாத்.