எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு |
பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய வறுகறி என்ற சிறுகதையை தழுவி உருவாகியுள்ள படம் சேத்துமான். இந்த படத்தை நீலம் புரோடக்சன் சார்பில் இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்துள்ளார். புதுமுக இயக்குனர் தமிழ் இயக்கியுள்ளார் புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
இது ஒரு தாத்தாவுக்கும், பேரனுக்கும் இடையிலான கதை. இந்தப் படத்தை தியேட்டரில் வெளியிட பா.ரஞ்சித் முயற்சி செய்தார் அது சாத்தியப்படவில்லை. அதனால் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளார்.
அதன்படி வருகிற 27ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை பெற்றிருக்கிறது.