மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் | மனதிற்குள் செய்திருந்த சபதத்தை நிறைவேற்றினாரா சமந்தா? | ‛வா வாத்தியார்' ரிலீஸில் சிக்கல் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் | திருமணம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா | இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் | அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் |

பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய வறுகறி என்ற சிறுகதையை தழுவி உருவாகியுள்ள படம் சேத்துமான். இந்த படத்தை நீலம் புரோடக்சன் சார்பில் இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்துள்ளார். புதுமுக இயக்குனர் தமிழ் இயக்கியுள்ளார் புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
இது ஒரு தாத்தாவுக்கும், பேரனுக்கும் இடையிலான கதை. இந்தப் படத்தை தியேட்டரில் வெளியிட பா.ரஞ்சித் முயற்சி செய்தார் அது சாத்தியப்படவில்லை. அதனால் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளார்.
அதன்படி வருகிற 27ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை பெற்றிருக்கிறது.