இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் வெற்றிகரமான இயக்குனராகவும் அதேசமயம் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகராகவும் ஒரே சமயத்தில் அறிமுகமானவர் சசிகுமார். அடுத்ததாக ஈசன் என்கிற படத்தை இயக்கினார். முதல் பட அளவிற்கு அவருக்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. அதேசமயம் ஒரு நடிகராக அவருக்கு வரவேற்பு அதிகம் கிடைக்கவே நடிப்பு பக்கம் தனது கவனத்தைத் திருப்பி கடந்த பத்து வருடங்களில் பல படங்களில் நடித்துவிட்டார் சசிகுமார்.
ஆனால் சுந்தரபாண்டியன், நாடோடிகள் என மிகச் சில படங்களே அவருக்கு வெற்றி பட வரிசையில் அமைந்தன. கடந்த வருடத்தில் கூட அவர் நடித்த படங்கள்தான் அதிகம் வெளியாகின. இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் டைரக்ஷன் பக்கம் திரும்ப உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் அவர் திரைப்படம் இயக்குவதற்கு பதிலாக வெப்சீரிஸ் தான் இயக்கப்போகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இதில் கதாநாயகனாக விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனை நடிக்க வைக்க இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.




