வதந்திகள் நல்ல விளம்பரம்: கிரிக்கெட் வீரருடன் நெருக்கம் பற்றி மிருணாள் தாக்கூர் | இந்தவாரம் 6 படங்கள் ரிலீஸ் : 2025 தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 300ஐ நெருங்குமா? | பிளாஷ்பேக்: முதல்வர் ஸ்டாலினுடன் நடித்த பாக்யஸ்ரீ | பிளாஷ்பேக்: திடீர் இயக்குனராகி, காணாமல் போன வில்லன் | மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் |

ஏ4 மீடியா ஒர்க்ஸ் சார்பில் டாக்டர். வீரபாண்டியன் மற்றும் டாக்டர் டெய்சி வீரபாண்டியன் தயாரித்துள்ள படம் துணிகரம். முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இந்த படத்தை பாலசுதன் இயக்கி உள்ளார். மெய்யேந்திரன் கெம்புராஜ் ஓளிப்பதிவு செய்துள்ளார். ஷான் கோகுல் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் பாலசுதன் கூறியதாவது : ஒரு தம்பதி மிக மிக அவசரமாக மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். அவர்களின் வாகனத்துக்குள் திடீரென்று ஒரு குழந்தைக் கடத்தல் கும்பல் ஏறிக் கொள்கிறது. அவர்கள் கண்ணெதிரே குழந்தை கடத்தப்படுவதை பார்க்கிறார்கள். அவர்கள் அவசரமாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியும் இருக்கிறது. அவர்கள் தாங்கள் புறப்பட்ட படி மருத்துவமனைக்குச் சென்றார்களா? கடத்தப்பட்ட குழந்தை மீட்புக்கு ஏதாவது உதவி செய்தார்களா? என்பதே படத்தின் கதை.
படத்தின் இரண்டாவது பாதியின் கதை முழுக்க ஒரு ஆம்புலன்சில் பயணிக்கிறது. இது ரசிகர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்கும். குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி ?அவர்களுக்கு எந்த வகையில் எல்லாம் ஆபத்துக்கள் வரும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய படமாகவும் இருக்கும். என்கிறார் இயக்குநர் பாலசுதன்.




