‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
நந்தா, பிதாமகன் படங்களைத் தொடர்ந்து பாலா இயக்கி வரும் புதிய படத்தில் தற்போது நடித்து வருகிறார் சூர்யா. மீனவர் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இதை அடுத்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கப்போகிறார் சூர்யா. அதற்கான ஒத்திகையும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு இன்று நேற்று நாளை மற்றும் அயலான் படங்களை இயக்கியுள்ள ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் சூர்யா. 2024ல் தொடங்கப் போகும் அந்தப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் துவங்கி உள்ளதாம். ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் 50 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த உலகில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த கதை களத்தில் உருவாகப் போவதாக தகவல்.