பாடகி ஜானகியின் மகன் மறைவு : பேத்தி வெளியிட்ட அறிக்கை | புதிய படங்களுக்குப் போட்டியான 'மங்காத்தா' ரீரிலீஸ் | கான்ஸ்டபிள் கனகம் வெப் சீரிஸின் 3வது சீசன் திரைப்படமாக வெளியாகிறது | மீண்டும் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கும் பறந்து போ நடிகை | துரந்தர் முதல் நாள் கலெக்ஷனை ஓவர்டேக் செய்த ‛பார்டர் 2' | கல்கி 2 படம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட தகவல் | ஜனவரி 30ல் திரைக்கு வரும் வடிவுக்கரசியின் க்ராணி! | ஆமா, அந்த பாபு யாரு...? : ரவி மோகனினிடம் கேட்கப்படும் கேள்வி | மங்காத்தாவை கொண்டாடும் அஜித் ரசிகர்கள் | மெரினா பீச் பெயரை மாற்ற வேண்டுமாம் : காமெடி பண்ணும் புது ஹீரோ |

நந்தா, பிதாமகன் படங்களைத் தொடர்ந்து பாலா இயக்கி வரும் புதிய படத்தில் தற்போது நடித்து வருகிறார் சூர்யா. மீனவர் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இதை அடுத்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கப்போகிறார் சூர்யா. அதற்கான ஒத்திகையும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு இன்று நேற்று நாளை மற்றும் அயலான் படங்களை இயக்கியுள்ள ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் சூர்யா. 2024ல் தொடங்கப் போகும் அந்தப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் துவங்கி உள்ளதாம். ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் 50 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த உலகில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த கதை களத்தில் உருவாகப் போவதாக தகவல்.