300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
நந்தா, பிதாமகன் படங்களைத் தொடர்ந்து பாலா இயக்கி வரும் புதிய படத்தில் தற்போது நடித்து வருகிறார் சூர்யா. மீனவர் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இதை அடுத்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கப்போகிறார் சூர்யா. அதற்கான ஒத்திகையும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு இன்று நேற்று நாளை மற்றும் அயலான் படங்களை இயக்கியுள்ள ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் சூர்யா. 2024ல் தொடங்கப் போகும் அந்தப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் துவங்கி உள்ளதாம். ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் 50 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த உலகில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த கதை களத்தில் உருவாகப் போவதாக தகவல்.