மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
பொதுவாக மலையாளத்தில் ஹிட் அடித்த படம் ஒன்றை மற்ற தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்வதற்காக போட்டி போட்டு வாங்குவார்கள். ஆனால் ஒவ்வொரு மொழி ரீமேக்கும் வெவ்வேறு காலகட்டத்தில் வெளியாவது தான் வழக்கம். இதற்கு முன்னதாக திலீப் நடித்த பாடிகார்ட், மோகன்லால் நடித்த திரிஷ்யம் ஆகிய படங்களின் ரீமேக்குகள் இந்த விதமாகத்தான் வெளியாகி உள்ளன.
அதேசமயம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஜோசப் என்கிற படமும் இதே போல தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக்காகி வருகிறது. இந்த நிலையில் தமிழில் இதன் ரீமேக்கில் ஆர்கே சுரேஷ் கதாநாயகனாக நடிக்க ஒரிஜினலை இயக்கிய இயக்குனர் பத்மகுமார் தமிழிலும் இயக்கியுள்ளார். விசித்திரன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் வரும் மே 6ம் தேதி ரிலீசாக உள்ளது.
அதேபோல இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் டாக்டர் ராஜசேகர் நடித்துள்ளார். சேகர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை அவரது மனைவி ஜீவிதா இயக்கியுள்ளார் நேற்று நடைபெற்ற சேகர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இந்த படம் மே 20ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு மலையாள படத்தின் தமிழ் தெலுங்கு ரீமேக்குகள் ஒரே சமயத்தில் அதிலும் 15 நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்த வெளியாகிறது என்பது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம் தான்.