தனுஷ் 55ல் இணைந்தார் ஸ்ரீலீலா | போட்டோகிராபர் செய்த செயல் : கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் | அட்லி, அல்லு அர்ஜுன் படப்பிடிப்பில் பிப்ரவரி முதல் இணையும் ஜான்வி கபூர் | ரஜினி 173வது படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் தழுவலா? | ஜூலையில் வெளியாகும் சூர்யா 46வது படம் | பெத்தி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக் : இரவு காட்சிகளை பகலில் படமாக்கிய முதல் படம் | 2027 ஏப்ரல் 7 : வாரணாசி வெளியீட்டு தேதி அறிவிப்பு | கேரளா ஸ்டோரி இரண்டாவது பாகமும் பரபரப்பு கிளப்புகிறது | வேள்பாரி கதையில் நடிக்கப்போவது யார்? : ரஜினிக்கு கவுரவ வேடமா? |

விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு சீசன் 6-ல் கலந்து கொண்டு டைட்டில் பட்டம் ஜெயித்தவர் பாலா. சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வரும் இவர் குக் வித் கோமாளில் நிகழ்ச்சியில் ரசிகர்களை சிரிக்க வைக்கும் கோமாளிகளில் ஷிவாங்கிக்கு அடுத்தப்படியாக முக்கியமான இடத்தில் இருக்கிறார். திரையில் காமெடியானாக தோன்றினாலும், நிஜத்தில் மிகவுன் செண்டிமெண்ட்டான சமூகப்பணியை பாலா செய்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டெலிவிஷன் அவார்டு நிகழ்ச்சியில் பாலாவுக்கு பெஸ்ட் காமெடியன் விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் செய்து வரும் சமூகப்பணிகள் குறித்தும் முதல் முறையாக வெளியுலகுக்கு தெரிவிக்கப்பட்டது. பாலா, முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு பல உதவிகளை செய்து வருவதோடு, பல ஏழை மாணவர்களின் படிப்பிற்கும் உதவி செய்து வருகிறார். இந்த செய்தி தெரிவிக்கப்பட்டு அவருக்கு விருது வழங்கப்பட்டது. அப்போது விருதை பெற்றுக்கொண்ட பாலா, “நூறு பேருக்கு கல்வி கொடுக்காம நான் உயிர கொடுக்க மாட்டேன்... கடவுள்கிட்டயே சொல்றேன்!” என உணர்ச்சி ததும்ப பேசினார். இதை கேட்ட பிரபலங்கள் அவருக்கு எழுந்து நின்று கைதட்டி மரியாதை செலுத்தினர். தற்போது சமூக ஊடகங்களிலும் பாலாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.