ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
2000ம் ஆண்டு காலகட்டத்தில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற தொடர் “கனா காணும் காலங்கள்”. புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடர்களில் இதுவும் ஒன்று. இதில் நடித்த பலர் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். தற்போது இந்த தொடர் புதியவர்களின் நடிப்பில் வெப் சீரிசாக தயாராகி உள்ளது. இந்த வெப் சீரிஸ் நாளை (ஏப்ரல் 22) முதல் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரத்தில் சிறகுகள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. பள்ளி நிறுவனர் சக்திவேல், 25 ஆண்டுகளாக பள்ளியை வெற்றிகரமாக நடத்தி, பல தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பதில் உதவிய அன்பான மனிதர். லாக்டவுன் காரணமாக மூடப்பட்ட பள்ளியை இரண்டரை வருட இடைவெளிக்குப் பிறகு பள்ளியை திறக்க உற்சாகமாக இருக்கிறார்.
ஆனால் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர் சேர்க்கை காரணமாக பள்ளியை மூடுவதற்கான அரசாங்க அறிவிப்பு வருகிறது. இந்த சவாலை ஆசிரியர் சக்திவேலும் மாணவர்களும் எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதுதான் தொடரின் கதை.
தீபிகா வெங்கடாசலம், ராஜா, வெற்றி, பிரபு அரவிந்த் செய்ஜு, தேஜா வெங்கடேஷ் ஆகிய புதுமுகங்களுடன் ராஜேஷ் பள்ளி நிறுவனர் சக்திவேலாக நடிக்கிறார். ராஜ்மோகன் பிடி மாஸ்டராக நடிக்கிறார்.