ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த வருடம் ஏப்ரல் 9ம் தேதி வெளியான கர்ணன் திரைப்படம் ஒரு வருடத்தை நிறைவு செய்தது. இது சம்மந்தமாக தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.
அந்த புகைப்படத்தில் தயாரிப்பாளர் எஸ்.தாணு , இயக்குனர் மாரி செல்வராஜ் தனுஷுற்கு கர்ணன் உருவச்சிலையை நினைவு பரிசாக வழங்கி உள்ளார்கள். இந்த உருவச்சிலையை வழங்க இருவரும் ஊட்டிக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளனர். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.




