இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் | அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு |

சமீத்தில் நடந்த கிராமி விருது வழங்கும் விழாவில் உலக புகழ்பெற்ற இசை கலைஞர்கள் நினைவு கூறப்பட்டார்கள். ஆனால் இந்தியாவை சேர்ந்த பாரத ரத்னா லதா மங்கேஷ்கரை நினைவு கூறாமல் புறக்கணித்தனர். இதனால் இனி வரும் காலங்களில் ஆஸ்கர், கிராமி போன்ற விருது விழாக்களை புறக்கணிக்க வேண்டும் என்று நடிகை கங்கனா ரணவத் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சர்வதேச விருதுகள் என்று கூறிக் கொண்டு விழா நடத்துகிறவர்கள் அவர்களின் இனம் அல்லது சித்தாந்தங்கள் காரணமாக பழம்பெரும் கலைஞர்களை புறக்கணித்து, வேண்டுமென்றே ஒதுக்கி வைக்கிறார்கள். அத்தகைய உள்ளூர் விருதுகளுக்கு எதிராக நாம் வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
ஆஸ்கர் மற்றும் கிராமி இரண்டு விருது விழாக்களிலும் பாரத ரத்னா லதா மங்கேஷ்கர்ஜிக்கு அஞ்சலி செலுத்த தவறிவிட்டனர். நமது ஊடகங்கள் உலகளாவிய விருதுகள் என்று கூறிக்கொள்ளும் இந்த உள்ளூர் நிகழ்வுகளை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.
இவ்வாறு கங்கனா எழுதியுள்ளார்.