திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி பிக்பாஸ் அல்டிமேட் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதற்கிடையில் கடைசிவார எவிக்ஷனாக யார் வெளியேறுவார் என ரசிகர்கள் அனைவரும் திக் திக் நொடிகளை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஹவுட்ஸ்மேட்டுகள் பலரும் தாமரைக்கு எதிராக இருந்ததால் அவர் தான் வெளியேற்றப்படுவார் என கருத்துகள் பரவியது.
ஆனால், பிக்பாஸ் தாமரையை காப்பாற்றி, அபிராமியை எலிமினேட் செய்துவிட்டார். பினாலே வாரத்தின் எவிக்சன் டாஸ்கில் போட்டியாளர்கள் மீது நெருப்பு பொறி கொட்டப்படுகிறது. அப்போது போட்டியாளர்களை அதிலிருந்து காப்பாற்றும் சேவ்ட் என்ற எழுத்து பொறிக்கப்பட்ட பாதுகாப்பு வளையம் அனைத்து ஹவுஸ்மேட்டுகள் மீதும் விழுகிறது. அபிராமி மீது மட்டும் விழவில்லை. இதனை தொடர்ந்து பிக்பாஸ் அபிராமி எலிமினேட் செய்யப்படுவதாக அறிவிக்கிறார். அபிராமி தனது சக போட்டியாளர்களிடம் விடைபெற்றுக் கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.