தமிழக அரசு விருது பெற்ற சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், ஏஆர் ரஹ்மான், கீர்த்தி சுரேஷ் | சினிமாவை போன்று விளம்பரங்களிலும் சம்பாதிக்கும் தமன்னா | நானியின் ‛தி பாரடைஸ்' படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம் | சிக்கிரி சிக்கிரி பாடலுக்கு சொந்தமாக நடன அசைவை வெளிப்படுத்திய ராம்சரண் | துல்கர் சல்மானின் 41வது படத்தில் இணைந்த ஜெகபதிபாபு | மூத்த மகனும் டைரக்ஷனில் இறங்குகிறார் ; பிரித்விராஜின் அம்மா தகவல் | படப்பிடிப்பில் இருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய மிருணாள் தாக்கூர் | 24வது வருட காதலர் தினம் : ஜெனிலியாவுக்கு பாராட்டு பத்திரம் வாசித்த கணவர் | பிரேமம் ரீ ரிலீஸ் : முதல் வரவேற்பை இப்போதும் பெறுமா? | திருமண வீடியோ உரிமை : வேண்டாமென்று மறுத்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா? |

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி பிக்பாஸ் அல்டிமேட் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதற்கிடையில் கடைசிவார எவிக்ஷனாக யார் வெளியேறுவார் என ரசிகர்கள் அனைவரும் திக் திக் நொடிகளை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஹவுட்ஸ்மேட்டுகள் பலரும் தாமரைக்கு எதிராக இருந்ததால் அவர் தான் வெளியேற்றப்படுவார் என கருத்துகள் பரவியது.
ஆனால், பிக்பாஸ் தாமரையை காப்பாற்றி, அபிராமியை எலிமினேட் செய்துவிட்டார். பினாலே வாரத்தின் எவிக்சன் டாஸ்கில் போட்டியாளர்கள் மீது நெருப்பு பொறி கொட்டப்படுகிறது. அப்போது போட்டியாளர்களை அதிலிருந்து காப்பாற்றும் சேவ்ட் என்ற எழுத்து பொறிக்கப்பட்ட பாதுகாப்பு வளையம் அனைத்து ஹவுஸ்மேட்டுகள் மீதும் விழுகிறது. அபிராமி மீது மட்டும் விழவில்லை. இதனை தொடர்ந்து பிக்பாஸ் அபிராமி எலிமினேட் செய்யப்படுவதாக அறிவிக்கிறார். அபிராமி தனது சக போட்டியாளர்களிடம் விடைபெற்றுக் கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.