மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா பிக்பாஸ்- 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இன்னொரு போட்டியாளரான கவினுடன் லாஸ்லியாவுக்கு காதல் ஏற்பட்டது. அதன்காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் அவர்கள் காதலர்களாக சுற்றி வருவதாக அவ்வப்போது செய்திகள் வைரலாகின.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்த லாஸ்லியா, தற்போது கூகுள் குட்டப்பன் படத்திலும் நடித்துள்ளார். தர்ஷன் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
இந்த நிலையில் தற்போது லாஸ்லியா அளித்துள்ள ஒரு பேட்டியில் , பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது கவினுக்கும் எனக்கும் இடையே ஒரு ஈர்ப்பு இருந்தது உண்மைதான். ஆனால் அந்த வீட்டை விட்டு வெளியேறி வெளி உலகத்துக்கு வந்து நாங்கள் பழகியபோது எங்களுக்கிடையே செட்டாகவில்லை. அதனால் இப்போது இருவருமே அவரவர் பாதையில் பயணித்து வருகிறோம். அந்தவகையில் எங்கள் இடையிலான காதல் பிரேக் அப் ஆகி நாங்கள் பிரிந்து விட்டோம் என்று தெரிவித்திருக்கிறார்கள் லாஸ்லியா.