Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கண்திருஷ்டி போட்டு விடாதீர்கள்- அர்ஜூனிடம் சொன்ன ஏ.ஆர்.ரகுமான்!!

16 ஜன, 2013 - 04:04 IST
எழுத்தின் அளவு:

கடல் படத்தின் நடிகர் நடிகைகளை அறிமுகம் செய்யும் விழாவை நேற்று சென்னையில் நடத்தினார் இயக்குனர் மணிரத்னம். அந்த விழாவில், மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான், வைரமுத்து, அர்ஜூன், அரவிந்த்சாமி, கார்க்கி மற்றும் படத்தில் அறிமுகமாகும் கவுதம், துளசி உள்பட ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது விழாவை தொகுத்து வழங்கிய அர்ஜூன், மேடைக்கு வந்தவர்களிடம் இரண்டொரு கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தார். பின்னர் ரகுமான் மேடையில் தோன்றி ஒரு பாடலுக்கு பியானோ வாசித்தார். அதையடுத்து அவரிடம் அர்ஜூன், 20 வருடமாக தொடர்ந்து மணிரத்னம் படத்துக்கு இசையமைக்கிறீர்களே? உங்கள் கூட்டணியின் ரகசியம் என்ன? என்று கேட்டார். அதற்கு, தயவு செய்து கண் திருஷ்டி போட்டு விடாதீர்கள் என்றார் ரகுமான். அதற்கு, என் கண்ணு ரொம்ப நல்ல கண்ணு சார் என்று சிரித்துக்கொண்டே சொன்னார் அர்ஜூன்.

இதையடுத்து ரகுமான் மேலும் கூறும்போது, என்னை ரோஜா படத்தில அறிமுகம் செய்தவர் மணி சார். அந்த வகையில் அவர்தான் எனது குரு. இப்போது வரை என்னிடம் இப்படி இப்படி பாடல் வேண்டும் என்றுகூட அவர் கேட்பதில்லை. சொல்லி விட்டு சென்று விடுவார் நானாகத்தான் பண்ணி கொடுப்பேன். அந்த அளவுக்கு அவரது எதிர்ப்பார்ப்புகளை புரிந்து வைத்திருக்கிறேன்.அவரும் அந்த நம்பிக்கையில்தான் வேலையை கொடுப்பார். மற்றபடி எங்கள் கூட்டணி தொடர்வதின் ரகசியம் இதுதான் என்கிறார் ரகுமான்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)