எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
இயக்குனர் சிவா கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் 'அண்ணாத்த' படத்தை இயக்கியிருந்தார். சமீபத்தில் நேர்காணலில் கூறிய சிவா , தான் அடுத்ததாக ரஜினி, அஜித், விஜய் ஆகியோருடன் புதிய படத்திற்காக பேச்சு வார்த்தை நடந்து வருவதாக குறிப்பிட்டார் .
இந்நிலையில் அவர் அடுத்ததாக சூர்யா நடிப்பில் புதிய படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . கிராமத்து கதைக்களத்தில் இருக்கும் இப்படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் . ஏற்கனவே சூர்யாவின் ஒரு படத்தை சிவா இயக்குவதாக இருந்தது. ஆனால் ரஜினி பட வாய்ப்பு வந்ததால் இந்த படம் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதையடுத்து சிவா இயக்கத்தில் நடிப்பார் என தெரிகிறது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.