பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

இயக்குனர் சிவா கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் 'அண்ணாத்த' படத்தை இயக்கியிருந்தார். சமீபத்தில் நேர்காணலில் கூறிய சிவா , தான் அடுத்ததாக ரஜினி, அஜித், விஜய் ஆகியோருடன் புதிய படத்திற்காக பேச்சு வார்த்தை நடந்து வருவதாக குறிப்பிட்டார் .
இந்நிலையில் அவர் அடுத்ததாக சூர்யா நடிப்பில் புதிய படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . கிராமத்து கதைக்களத்தில் இருக்கும் இப்படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் . ஏற்கனவே சூர்யாவின் ஒரு படத்தை சிவா இயக்குவதாக இருந்தது. ஆனால் ரஜினி பட வாய்ப்பு வந்ததால் இந்த படம் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதையடுத்து சிவா இயக்கத்தில் நடிப்பார் என தெரிகிறது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.