'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா |
பாய்ஸ் படத்தில் 5 நாயகர்களில் ஒருவராக அறிமுகமாகி அதன்பின் பல படங்களில் நடித்த பரத் இப்போது 50வது படத்தை எட்டி உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை பல படங்களுக்கு வசனம் எழுதிய ஆர்.பி.பாலா இயக்கி இயக்குனராக அறிமுகமாவதோடு, தயாரிக்கவும் செய்கிறார். பரத்துக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். இந்த படத்தில் விவேக் பிரசன்னா, டேனியல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். திரில்லர் கலந்த பேமிலி டிராமா படமாக உருவாகிறது. முத்தையா ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பரத், வாணிபோஜன், இயக்குனர் ஆர்.பி.பாலா, தயாரிப்பாளர் எஸ்.தாணு உள்ளிட்டோர் பங்கேற்றனர். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.