மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா |

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் ஜெய் பீம். இந்தப்படத்தில் வன்னியர்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக பாமக எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து படத்தில் சில காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டன. அதேசமயம் எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் ஜெய் பீம் படம் எடுக்கப்படவில்லை என்று சூர்யா ஒரு விளக்கம் கொடுத்திருந்தார். ஆனால் பாமகவினர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி வந்தனர்.
இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10 ஆம் தேதியான நாளை திரைக்கு வருகிறது. இதையடுத்து கடலூரில் எதற்கும் துணிந்தவன் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி பாமக சார்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதோடு தியேட்டர் அதிபர்களுக்கும் அப்படத்தை வெளியிடக் கூடாது என்று பாமக சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். குறிப்பாக, வன்னியர் மக்களிடம் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்காத வரை அவரது படத்தை வெளியிடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என பாமக சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் நாளை எதற்கும் துணிந்தவன் படம் திரைக்கு வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடிகர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.