என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சத்யராஜ், சரண்யா, வினய் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் ‛எதற்கும் துணிந்தவன்'. மார்ச் 10ல் தியேட்டர்களில் இந்த படம் வெளியாகிறது. சூர்யாவின் முந்தைய இரண்டு படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில் இந்த படம் தியேட்டர்களில் வெளியாகிறது. இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பா.ம.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சூர்யாவின் முந்தைய படமான ஜெய் பீம் படம் பாராட்டை பெற்றாலும் அதில் வன்னியர்களை தவறாக சித்தரித்ததாக சர்ச்சையும் வெடித்தது. இதற்கு பா.ம.க.வினர் அப்போதே எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் இதையே காரணம் காட்டி ஜெயம் பீம் பட விவகாரத்தில் சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை அவரது படத்தை கடலூர் மாவட்டத்தில் திரையிட அனுமதிக்க கூடாது என பா.ம.கட்சியின் மாணவர் சங்க மாநில செயலாளர் விஜயவர்மன் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் கடலூர் மாவட்டத்தில் சூர்யா படம் திரையிடுவதில் புதிய சிக்கல் உருவாகி உள்ளது.