மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமான சாய்பல்லவி அதன்பிறகு மலையாளம், தமிழ் படங்களில் நடித்தாலும், தெலுங்கில் அவர் முன்னணி நடிகையாகவே மாறிவிட்டார். சரியான படங்களை தேர்வு செய்து நடித்துவரும் சாய்பல்லவிக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் வட்டமும் தெலுங்கு திரையுலகில் உருவாகியுள்ளது. அது எந்த அளவிற்கு என்பதை நேற்று நடைபெற்ற ஆடவல்லு மீக்கு ஜோஹார்லு என்கிற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கண்கூடாக காண முடிந்தது.
கிஷோர் திருமலா இயக்கத்தில் சர்வானந்த், ராஷ்மிகா இணைந்து நடித்துள்ள இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் சாய்பல்லவி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் புஷ்பா பட இயக்குனர் சுகுமாரும் கலந்துகொண்டு பேசும்போது சாய்பல்லவியின் பெயரை குறிப்பிட்டு பேச ஆரம்பித்தார். அப்போது அரங்கில் இருந்த ரசிகர்கள் கரகோஷம் இயக்குனர் சுகுமாரை பேசவிடாமல் நீண்ட நேரம் ஸ்தம்பிக்கச் செய்தது.
மீண்டும் ஒரு வழியாக சுதாரித்து பேச ஆரம்பித்த இயக்குனர் சுகுமார், சாய்பல்லவி தெலுங்கு சினிமாவின் லேடி பவன் கல்யாண் ஆக மாறிவிட்டார் என்று சொல்ல, அருகில் நின்றிருந்த ராஷ்மிகா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட சக நடிகைகளும் அரங்கில் அமர்ந்திருந்த ரசிகர்களும் கைதட்டி ஆரவாரக் கூச்சல் எழுப்பினார்கள்.
அதேபோல சாய்பல்லவி பேச ஆரம்பித்தபோதும் கூட, அவரது ரசிகர்கள் ஆரவாரம் செய்த வழியே இருந்தனர் இதனால் உங்கள் அன்புக்கு நன்றி என்று மட்டும் சொல்லிவிட்டு தனது பேச்சை முடித்துக் கொண்டார் சாய்பல்லவி.
இந்த படத்தின் கதாநாயகி ராஷ்மிகா தான் என்றாலும் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக, படத்திற்கு சம்பந்தமே இல்லாத சாய்பல்லவி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நட்புக்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஒரு மிகப் பெரிய முன்னுதாரணமாக அமைந்து விட்டது என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவில் இத்தகைய மாற்றம் எப்போது வருமோ