டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
திரிஷ்யம், த்ரிஷ்யம்-2 என இரண்டு படங்களின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்.. திரிஷ்யம்-2 படத்தை முடித்த பின்னர் அதற்கடுத்ததாக தெலுங்கிலும் த்ரிஷ்யம்-2 படத்தை ரீமேக் செய்து இயக்கினார்.. மீண்டும் மோகன்லாலை வைத்து ட்வல்த் மேன் என்கிற படத்தையும் இயக்கி முடித்து ரிலீஸுக்கும் தயார்நிலையில் வைத்துவிட்டார் ஜீத்து ஜோசப்.
அதேசமயம் ஏற்கனவே மோகன்லால், திரிஷா நடிப்பில் ஆரம்பித்த ராம் படத்தை தற்போதுள்ள சூழ்நிலையில் வெளிநாட்டில் படமாக்க இயலாது என்பதால் தற்சமயம் கிடப்பில் போட்டுவிட்டார். இந்தநிலையில் தற்போது மலையாள இளம் நடிகர் ஆசிப் அலி என்பவரை ஹீரோவாக வைத்து கூமன் என்கிற படத்தை இயக்குகிறார் ஜீத்து ஜோசப். ஆக்சன் படமாக உருவாகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியுள்ளது.