சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

சுசீந்திரன் இயக்கத்தில் கிராமத்து கதைக்களத்தில் ஜெய் நடித்து, இசையமைத்து தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் வீரபாண்டியபுரம். இந்த படத்திற்கு பிறகு மீண்டும் ஜெய்யை வைத்து புதிய படத்தை இயக்கவிருப்பதாக இயக்குனர் சுசீந்திரன் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது : "எனது இயக்ககத்தில் ஜெய் நடிப்பில் வெளியான வீரபாண்டியபுரம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை ஜெய் சிங்கிள் ஹீரோவாக நடித்து ஓடவில்லை என பலர் கூறியுள்ளனர். ஆனால் ராஜா ராணி, சென்னை 28, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் மட்டுமே ஓடின. இதை உடைத்திருக்கிறது வீரபாண்டியபும் திரைப்படம் . ஜெய்யும், நானும் மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைந்திருக்கிறோம். இந்தப் படத்திற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும்".
இவ்வாறு தெரிவித்துள்ளார்