ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஓட்டுப்பதிவு 30 ஆயிரத்து 735 மையங்களில் இன்று(பிப்., 19) காலை 7 மணிக்கு துவங்கியது. நடிகர் விஜய் சென்னை, நீலாங்கரை பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டுபதிவு துவங்கிய சிறிது நேரத்திலேயே வந்து ஓட்டளித்தார். விஜய்யை பார்க்க மக்கள் கூட்டம் கூடியதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க வந்தவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதையடுத்து ஓட்டுப்போட்டுவிட்டு வந்த விஜய், தன்னால் சிரமத்திற்கு உள்ளான பொதுமக்களிடம் மன்னிப்பு கோரினார். இந்த வீடியோ வைரலானது.
கடந்தமுறை சட்டசபை தேர்தலின் போது சைக்கிளில் வந்து ஓட்டளித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் விஜய் இன்று, சிவப்பு நிற மாருதி காரில் வந்து ஓட்டளித்து சென்றார்.
![]() |