ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை காஜல் அகர்வால் கடந்த வருடம், தனது காதலரான கவுதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த வருடம் தனது காதலர் தினத்தை பொள்ளாச்சியில் ஒரு சாதாரண சாலையோர உணவகத்தில் கொண்டாடி அந்த புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.
இந்தநிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு தனது கணவரின் மேல் தனது கால்களை போட்டபடி அன்யோன்யமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துகொண்டுள்ள காஜல் அகர்வால், 'இந்த அழகனை அவரது பிழைகள் பொறுத்து 2012லிருந்து காதலித்து வருகிறேன்.. ஹேப்பி காதலர் தினம்” என கூறியுள்ளார்.
பொதுவாக நடிகைகளின் காதல் எதோ ஒரு விதத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள்ளாகவே மீடியாவில் கசிந்து விடும்.. நயன்தாரா, சமந்தா, அமலாபால் ஆகியோரின் காதல் விஷயம் எல்லாம் அப்படி உடனே வெளியானவை தான்.. ஆனால் முன்னணி நடிகையாக வலம் வந்தபோதும் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக, அதாவது தனது திருமண அறிவிப்பை வெளியிடும் வரை தனது காதல் குறித்த ரகசியத்தை காஜல் அகர்வால் கட்டிக்காத்து வந்துள்ளார் என்பது ஆச்சர்யமான விஷயம் தான்.