அரசாங்கம் எங்கே ? : அதிதி பாலன் கேள்வி | 2015ல் தேங்காத தண்ணீர் இந்த மழையில் தேங்கியது ஏன்? : நடிகை கீர்த்தி பாண்டியன் காட்டம் | அவமானமாக உணர்கிறேன் : ஜோதிகா பட இயக்குனர் | 'ரெட் கார்ப்பெட், ரெட் கவுன்' : நிறைவேறிய ஷாரூக்கான் ஆசை | ஜுனியர் நடிகை தற்கொலை : 'புஷ்பா நடிகர் கைது | இப்படித்தான் டின்னர் சாப்பிடணும் - ஜான்வி கபூர் | ரஜினி பிறந்தநாளில் 'ரஜினி 170, லால் சலாம்' அப்டேட்ஸ் | நாளை டிசம்பர் 8ல் 3 படங்கள் மட்டுமே ரிலீஸ் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் | கை கோர்ப்போம் துயர் துடைப்போம் : நடிகர் விஜய் அறிவுறுத்தல் |
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான ரவிதேஜா நடித்துள்ள கில்லாடி என்கிற படம் வரும் பிப்-11ஆம் தேதி வெளியாக இருக்கிறது.. கடந்த வருடம் கொரோனா இரண்டாவது அலை ஆரம்பித்த சமயத்தில் வெளியான அவரது கிராக் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தவகையில் இந்த கில்லாடி படத்தின் வெற்றியையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார் ரவிதேஜா.
அதேசமயம் அதே பிப்-11ஆம் தேதி விஷ்ணு விஷால் நடித்துள்ள எப்ஐஆர் படமும் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்த எப்ஐஆர் படத்தை தெலுங்கில் வெளியிடுபவரும் ரவிதேஜா தான். ஒரே நாளில் தனது படத்தையும் தான் வெளியிடும் படத்தையும் ரிலீஸ் செய்வது ரவிதேஜாவின் துணிச்சலா இல்லை பெருந்தன்மையா..?. இல்லை இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெரும் என்கிற நம்பிக்கையா..? வெள்ளிக்கிழமை விடை தெரிந்துவிடும்.