நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

வாரிசு நடிகை என்கிற அடையாளத்துடன் சினிமாவில் களமிறங்கியவர் தான் இயக்குனர் பிரியதர்ஷன் - நடிகை லிசி தம்பதியின் மகளான கல்யாணி.. தெலுங்கில் அறிமுகமானாலும் தற்போது தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தான் பிஸியாக நடித்து வருகிறார் கல்யாணி. சமீபத்தில் இவரது நடிப்பில் தமிழில் வெளியான மாநாடு, மலையாளத்தில் வெளியான ஹிருதயம் மற்றும் ப்ரோ டாடி ஆகிய மூன்று படங்களுமே வெற்றி பெற்றதால் ராசியான நடிகை என்கிற பெயரையும் பெற்றுள்ளார்.
தவிர சோஷியல் மீடியாவிலும் கல்யாணி பிரியதர்ஷன் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகிறார். ரசிகர்களுடன் அவ்வப்போது கேள்வி பதில் உரையாடல் நடத்திவரும் கல்யாணி, தனது படம் குறித்த அப்டேட் தகவல்களையும் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். அந்தவகையில் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். இந்த தகவலை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்தி உள்ளார் கல்யாணி பிரியதர்ஷன்.