டாப்ஸி படத்தில் கதாநாயகியாக சமந்தா | விக்ரம் படம் பார்த்துவிட்டு கமலை வாழ்த்திய வானதி சீனிவாசன் | மலையாள இயக்குனர் தமிழில் இயக்கும் படத்தில் ஹீரோவாக சரத்குமார் | உருக்கமாக பதிவிட்டு அனுதாபம் தேடும் பாலியல் புகார் நடிகர் | ஆதித்த கரிகாலன், வந்தியத் தேவன் வருகை : மற்றவர்கள் எப்போது ? | உதயநிதியின் அடுத்த படத் தலைப்பு 'கழகத் தலைவன்' ? | எதற்கும் அஞ்சமாட்டேன் ; உயிரை விடவும் தயார் : காளி போஸ்டர் சர்ச்சைக்கு லீனா மணிமேகலை பதில் | கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் : இயக்குநர் திடீர் மாற்றம் | பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் : அறிமுக நடிகை அதிர்ச்சி தகவல் | ஹிந்தி விக்ரம் வேதா பட்ஜெட் அதிகரிப்பா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் |
கடந்த 2017ம் ஆண்டு தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் மலையாள முன்னணி நடிகரான திலீப், அவரது கார் டிரைவர் சுனில் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் திலீப் மட்டும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் பலாத்காரத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவை திலீப் பார்த்து ரசித்ததாக கூறப்பட்டது. அந்த வீடியோவை போலீசார் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். தற்போது இந்த வீடியோ வெளியாகி விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நடிகை வீடியோ வெளியானது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வீடியோ பரவுவதை தடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தின் நகலை ஜனாதிபதி, பிரதமர், கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, கேரள முதல்வர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளார்.