ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
சமுத்திரகனி நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் பப்ளிக். இதனை ரா.பரமன் என்ற புதுமுகம் இயக்கி இருக்கிறார். காளி வெங்கட், ரித்விகா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இமான் இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் "இந்த படத்தின் கதையின் நிஜமானது. இது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல" என்ற வாசகத்துடன் வெளியானது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் ரா.பரமன் கூறியிருப்பதாவது:
அடிப்படையில் நான் ஒரு பத்திரிகையாளன். சில வருடங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சியில் பணியாற்றியபோது தலைவர்கள், தொண்டர்களை சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினேன். அப்போது தான் தலைவன், தொண்டன் இருவரின் மனநிலையையும் அறிய முடிந்தது. இதைதொடர்ந்து பல்வேறு கட்சிகளின் தொண்டர்களை சந்தித்து, அவர்களுடன் பேசியதிலிருந்து உருவானது தான் பப்ளிக்.
எந்த படத்தின் கதையும் முழுக்க முழுக்க கற்பனையாக இருக்க முடியாது. சமூகத்திலிருக்கும் ஏதோ ஒரு விஷயத்தை எடுத்துதான், அதை கற்பனையாக மாற்றி எடுக்க இயலும். அப்படி இருக்கும்போது அரசியல் படம் என்று சொல்லிவிட்டு, இது முழுக்க முழுக்க கற்பனையே என்று கூறினால், அது மக்களை ஏமாற்றுவது போலாகிவிடும். அதனால்தான் இதனை நிஜமான கதை என்று விளம்பரம் செய்கிறோம். என்றார்.