ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் டாப் நடிகைகளில் ஒருவர் டாப்ஸி. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்தவர். பிங்க் படத்தின் மூலம் பாலிவுட்டின் முன்னணி நடிகை ஆனார். அதன்பிறகு ரன்னிங் ஷாதி, தி காசி அட்டாக், நாம் ஷபானா உள்பட பல படங்களில் நடித்த அவர் தப்பட், ராஷ்மி ராக்கெட், ஹசன் தில்ருபா படங்கள் மூலம் சோலோ ஹீரோயின் ஆனார். இப்போது கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கை கதையான சபாஷ் மிது, உள்பட 4 பாலிவுட் படங்களிலும் தலா ஒரு தெலுங்கு, தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: முன்பெல்லாம் வாய்ப்பு கிடைக்கும் படங்களில் எல்லாம் நடித்தேன். இப்போது தேர்வு செய்து நடிக்கும் இடத்திற்கு வந்திருக்கிறேன். எனது படங்களை மக்கள் ஏற்றுக் கொள்வதால் நான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். இனி நான் சினிமாவைத் தேடி ஓடுவதில்லை. ஒருவேளை படங்கள் இல்லை என்றால் நல்ல தயாரிப்பாளர்களை தேடி நான் ஓடுவேன். எனக்காக இந்த வேலையை யாரும் செய்ய மாட்டார்கள். நான் சுதந்திரமாக இருப்பதால் எனக்கான வேலையை நானே செய்து கொள்வேன். என்று கூறியிருக்கிறார்.