கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
நாகசைதன்யா - சமந்தா பிரிந்து விட்டனர். இவர்கள் பிரிவுக்கு பல்வேறு விதமான காரணங்கள் சமூகவலைதளங்களில் றெக்க கட்டி பறந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இவர்கள் பிரிவு பற்றி நடிகர் நாகார்ஜூனா கூறியதாக ஒரு கருத்து உலா வருகிறது. அதாவது, ‛‛நடிகை சமந்தா தான் முதலில் விவாகரத்து கேட்டதாகவும், இதை கேட்டு தனது மகன் மிகவும் வருந்தினார்'' என்று அவர் கூறியதாக செய்தி பரவியது. ஆனால் இதை நாகார்ஜூனா மறுத்துள்ளார்.
நாகார்ஜூனா கூறுகையில், ‛சமந்தா மற்றும் நாகசைதன்யா பற்றிய எனது அறிக்கையை மேற்கோள்காட்டி சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களில் வரும் செய்தி முற்றிலும் தவறானது; முட்டாள்தனமானது. வதந்திகளை செய்தியாக வெளியிடுவதை தவிர்க்குமாறு ஊடக நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்' எனக்கூறியுள்ளார்.