ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் |
நாகசைதன்யா - சமந்தா பிரிந்து விட்டனர். இவர்கள் பிரிவுக்கு பல்வேறு விதமான காரணங்கள் சமூகவலைதளங்களில் றெக்க கட்டி பறந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இவர்கள் பிரிவு பற்றி நடிகர் நாகார்ஜூனா கூறியதாக ஒரு கருத்து உலா வருகிறது. அதாவது, ‛‛நடிகை சமந்தா தான் முதலில் விவாகரத்து கேட்டதாகவும், இதை கேட்டு தனது மகன் மிகவும் வருந்தினார்'' என்று அவர் கூறியதாக செய்தி பரவியது. ஆனால் இதை நாகார்ஜூனா மறுத்துள்ளார்.
நாகார்ஜூனா கூறுகையில், ‛சமந்தா மற்றும் நாகசைதன்யா பற்றிய எனது அறிக்கையை மேற்கோள்காட்டி சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களில் வரும் செய்தி முற்றிலும் தவறானது; முட்டாள்தனமானது. வதந்திகளை செய்தியாக வெளியிடுவதை தவிர்க்குமாறு ஊடக நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்' எனக்கூறியுள்ளார்.