'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ |

நாகசைதன்யா - சமந்தா பிரிந்து விட்டனர். இவர்கள் பிரிவுக்கு பல்வேறு விதமான காரணங்கள் சமூகவலைதளங்களில் றெக்க கட்டி பறந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இவர்கள் பிரிவு பற்றி நடிகர் நாகார்ஜூனா கூறியதாக ஒரு கருத்து உலா வருகிறது. அதாவது, ‛‛நடிகை சமந்தா தான் முதலில் விவாகரத்து கேட்டதாகவும், இதை கேட்டு தனது மகன் மிகவும் வருந்தினார்'' என்று அவர் கூறியதாக செய்தி பரவியது. ஆனால் இதை நாகார்ஜூனா மறுத்துள்ளார்.
நாகார்ஜூனா கூறுகையில், ‛சமந்தா மற்றும் நாகசைதன்யா பற்றிய எனது அறிக்கையை மேற்கோள்காட்டி சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களில் வரும் செய்தி முற்றிலும் தவறானது; முட்டாள்தனமானது. வதந்திகளை செய்தியாக வெளியிடுவதை தவிர்க்குமாறு ஊடக நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்' எனக்கூறியுள்ளார்.




