கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

கொரானோ முதல் அலை வந்த பிறகு புதிய திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடும் முறை அதிகமானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் கடந்த இரண்டு வருடங்களாக நூற்றுக்கணக்கான படங்கள் அப்படி வெளியாகியுள்ளது.
நேரடியாக வெளியாகும் படங்கள் படைக்கும் சாதனை ஒரு பக்கம் இருந்தாலும், தியேட்டர்களில் வெளியான பின் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களும் சாதனைகளைப் படைக்கிறது. அந்த வகையில் பாலகிருஷ்ணா நடித்த தெலுங்குப் படமான 'அகான்டா' படம் இரண்டு தினங்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது.
படம் வெளியான 24 மணி நேரங்களில் டிஜிட்டல் தளங்களில் அதிக பார்வைகளைப் பெற்ற படம் என்ற சாதனையை 'அகான்டா' படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தியேட்டர் வெளியீட்டிலும் 100 கோடி வசூலைப் பெற்ற இப்படம் ஓடிடியிலும் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படுகிறது. வரும் பிப்ரவரி 27ம் தேதி இப்படம் ஸ்டார் மா டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளது. அப்போது டிவி ரேட்டிங்கிலும் இப்படம் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




