ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கொரானோ முதல் அலை வந்த பிறகு புதிய திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடும் முறை அதிகமானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் கடந்த இரண்டு வருடங்களாக நூற்றுக்கணக்கான படங்கள் அப்படி வெளியாகியுள்ளது.
நேரடியாக வெளியாகும் படங்கள் படைக்கும் சாதனை ஒரு பக்கம் இருந்தாலும், தியேட்டர்களில் வெளியான பின் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களும் சாதனைகளைப் படைக்கிறது. அந்த வகையில் பாலகிருஷ்ணா நடித்த தெலுங்குப் படமான 'அகான்டா' படம் இரண்டு தினங்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது.
படம் வெளியான 24 மணி நேரங்களில் டிஜிட்டல் தளங்களில் அதிக பார்வைகளைப் பெற்ற படம் என்ற சாதனையை 'அகான்டா' படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தியேட்டர் வெளியீட்டிலும் 100 கோடி வசூலைப் பெற்ற இப்படம் ஓடிடியிலும் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படுகிறது. வரும் பிப்ரவரி 27ம் தேதி இப்படம் ஸ்டார் மா டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளது. அப்போது டிவி ரேட்டிங்கிலும் இப்படம் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.