22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரகுமான், அவரது சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில சுவாரசியமான தகவல்கள், செய்திகளைப் பகிர்வார்.
சற்று முன் இரண்டு சிறுமிகள் பாடிய ஒரு தமிழ்ப் பாடலின் வீடியோவைப் பகிர்ந்து, “இந்த இரண்டு சகோதரிகள் சில சீரியசான கேள்விகளை இந்தப் பாடல் மூலம் கேட்கிறார்கள்” என்றும், “தண்ணீர், உணவு, மனித நேயம், அன்பு, இரக்கம்” ஆகிய ஹேஷ்டேக்குகளுடனும் குறிப்பிட்டுள்ளார் ரகுமான்.
அந்த சிறுமிகள் பாடிய பாடல் இயக்குனர் பாலா தயாரிப்பில், அருணகிரி இசையமைப்பில், அதர்வா ஆனந்தி, லால் நடித்து 2015ல் வெளிவந்த 'சண்டி வீரன்' படத்தில் இடம் பெற்ற 'தாய்ப்பாலும் தண்ணீரும்…' என்ற கிராமியப் பாடல். இந்த சிறுமிகளின் பாடலைப் பகிர்ந்து ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டிருப்பதால் அந்த வீடியோவை தற்போது பலரும் பார்த்து பாராட்டி வருகிறார்கள்.