ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சின்னத்திரை நட்சத்திர நாயகி தர்ஷா குப்தா. அவளும் நானும் என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன்பிறகு முள்ளும் மலரும், செந்தூரப்பூவே தொடர்களில் நடித்தார். தற்போது சினிமாவில் ஹீரோயின் ஆகிறார்.
நெப்டியூன் எண்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் தர்ஷா குப்தாதான் நாயகி. நாயகனாக அசோக் குமார் நடிக்கிறார். டைகர் தங்கதுரை,அங்காடித்தெரு மகேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இன்பான்ட் பரத் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெய்கிருஷ்ணா இசை அமைக்கிறார். குருசேனாபதி இயக்குகிறார்.
படம் பற்றிஅவர் கூறியதாவது: ஒரு மலை பிரதேசத்தில் அடுத்தடுத்து நடக்கின்ற விசித்திரமான கொலைகளை மையமாக வைத்து உருவாகும் படம். ஏற்காடு, மலேசியா மற்றும் பல இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.