'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
இலங்கை தமிழரான முத்தையா முரளிதரன், இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர். இவரது வாழ்க்கையை 800 என்ற பெயரில் படமாக்க முயற்சிகள் நடந்தது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்க பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்தது. விஜய்சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்கான போட்டோ ஷூட் நடத்தப்பட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.
முத்தையா முரளிதரன் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் குடும்ப நண்பர். தமிழர்களுக்கு எதிரானவர் அவரது வாழ்க்கை படத்தில் நடிக்க கூடாது என்று சில அமைப்புகள் விஜய்சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே விஜய்சேதுபதி படத்தில் இருந்து விலகிக் கொண்டார். படமும் கிடப்பில் போடப்பட்டது.
இப்போது படத்தின் பணிகளை மீண்டும் தொடங்கி உள்ளனர். விஜய் சேதுபதிக்கு பதிலாக ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் அறிமுகமாகி இப்போது பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் தேவ் படேல் நடிக்கிறார் என்றும் அதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரிபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாளில் வெளியாகும் என்ற தெரிகிறது.